இன்று எங்கள் அலுவலகத்தில் " Social Responsibility" என்று, சமுதாய வளர்ச்சிக்கு என்ன செய்யலாம், ஏழைகளுக்கு உதவுவது பற்றி ஒரு கூட்டம் மதியம் இரண்டு மணி அளவில் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள் ... நாங்கள் வழக்கம் போல வீட்ல செய்த சோறு, குழம்பு எடுத்துகிட்டு கான்டீன் நோக்கி சென்றோம் .... அங்க பார்த்தா.. உள்ள இருந்த இருக்கைகள் எல்லாம் விளக்கி வைக்கப்பட்டு இருந்தது...அந்த நிகழ்ட்சிக்காக மேஜை எல்லாவற்றையும் வெளியில் போடு வைத்திருந்தார்கள்.. ...
பின்னர் நாங்கள் வெளிய வராண்டாவில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட நேரிட்டது ...அங்கே சாப்பிடும் போது நல்ல வெயில் அடிச்சுது ... அந்த வெயிலில் உட்கார்ந்து சாப்பிட கஷ்டமா இருந்தது... அப்போது நினைவிக்கு வந்தது.... நமக்கு அந்த அரிசியை படைக்கும் ஏழை விவசாயிகள் தினமும் வெயிலில் தான் உழைக்கிறார்கள் ... மற்றும் அவர்கள் மதிய உணவு அந்த வெயிலில் தான் உட்கொள்ளுவார்கள்...
இந்த "Corporate Social Responsibility" நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பாகவே அதற்கு செய்த ஏற்பாடு எங்களுக்கு அதன் பொருளை உணர்த்தி விட்டது ....
:)))
ReplyDelete