Thursday, September 04, 2008

இன்று ஒரு தனிமை

தனிமை என்பது பற்றிய சிறிய உளறல்கள் இங்கே....

தனியாக எங்கேயும் இருப்பது தனிமை அல்ல.. பெரிய கூட்டத்தில் யாருமே கூட பேசுறதுக்கு இல்லாம இருப்பது தனிமை ... மற்றவர்களை விட தான் உயர்ந்தவன் இல்ல தாழ்ந்தவள் என்று நினைப்பது தனிமை .... கல்லூரி காலத்தில் நண்பர்கள் இல்லாமல் இருப்பது தனிமை ... விழாக்காலங்களில் உறவினர்கள் இல்லாமல் இருப்பது தனிமை ...

தனிமை இனிக்கும்
இயற்கையை ரசிக்கும் போது
காதலில் விழுந்த போது
இன்னிசை கேட்கும் போது
கண்ணிலே நீர் வரும்போது ...

தனிமை ஞாபக படுத்துவது
மழைக் காலங்களில் மனதிற்கு பிடித்தவர்களை
வெட்டியாக இருக்கும் போது இந்த பதிவுகளை
துன்பம் நிறைந்த நேரத்தில் நெருங்கிய நண்பனை
நடந்து செல்லும் போது உடனிருக்கும் அலைபேசியை

இன்றைக்கு போது இந்த மொக்கை .....